மதரசாக்களில் ஆங்கில வழி கல்வி

General India news in detail

கோல்கட்டா:

மேற்கு வங்கத்தில் உள்ள மதரசாக்களில் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் முஸ்லிம் வாரியத்தின் சார்பில் மதரசா பள்ளிகள் இயங்கி வருகின்றன.

பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் இந்த மதரசா பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகபடுத்தப்பட உள்ளது.

தற்போது ஹூக்ளியில் உள்ள மதரசாவில் மட்டும் ஆங்கில வழி கல்வி உள்ளது. கோல் கட்டா, மால்டா, முர்ஷிதாபாத், தினாஜ்பூர், பிர் பும், கூச்பிகார், ஹவ்ரா உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள 12 மதரசாக்களில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆங்கில வழி கல்வியை மதரசாக்களில் அறிமுகப்படுத்தி, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுகளை கவர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

News courtesy :Dinamalar.com